Archive for the ‘தமிழ்-Tamil’ Category

எல்லாம் கடவுள் என்னும் மாயை

Saturday, December 6th, 2014

எல்லாமும் கடவுள் என்ற கடவுள்தான் எல்லாம் கொள்கையும் என்ற பழைய பழமொழி ஒன்றுண்டு. நட்புடன் வாழ்ந்த 3 Musketeers என்ற கதையில் “எல்லாமும் ஒருவருக்கு ஒருவர்தான எல்லாவற்றுக்கும்” என்று சொல்வது போல் உள்ளது. மனோதத்துவக்கட்டுதலோடு கூடிய கடவுள் தன்மை, தத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதபடி சித்தரிக்கப்பட்டுள்ளது.

முடிவில்லாத தெய்வத்தை சின்னச் சின்ன உறுப்புகளாக வைத்து விளக்க முடியுமா? இது கடவுட்தன்மையின் உள்ளியத்துக்கு முரணானது.மறைபொருளான அறியாமை கடவுளுக்கு எவ்வாறு வந்தது?கடவுளின் அபரிதமான அறியாநிலை ஒற்றுமை இன்மையை எவ்வாறு தந்தது?

இப்படி உறுதியளிக்கின்ற நிலையற்று சேர்ந்தே இல்லாமல் இருப்பது எவ்வாறு பின்னர் சேர்ந்து வரும்? இப்போதுள்ள ஜனத்தொகைப்பெருக்கத்தைப் பார்க்கும்போது மாயையான வாழ்வு நீடித்து எப்படி முழுமையாக ஒன்றினையும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?கடவுளை ஒழுக்கமில்லாமiயாகவும் சிலநேரம் ஒழுக்கமாகவும் சித்தரிப்பது இருபொருள் தருகிறது.இந்த உயர்வான ஒழுக்கநிலை எவ்வாறு தாழ்ந்த ஒழுக்க நிலைக்கு வரமுடியும்? இந்துக்கள் நல்லதாக நடக்க கூறுகிறார்கள். ஆனால் உள்ளுணர்வில் அந்நிலை பிறழ எப்படி செல்ல முடியும். அவர்கள் கிரியைகள் கொள்கைக்கேற்ப இல்லாமல் நடைமுறைக்கேற்ப அமைகிறது.இந்தக்கொள்கை, சமுதாயத்துக்கு, கலாசாரத்திற்கு நன்கொடையாக அமையும். இதை ஒவ்வொரு படிக்கல்லாக எடுத்து நாம் மோட்சத்துக்குப் போக முடியாது.தினசரி வாழ்வுக்கும் இந்தக்கொள்கைக்கு சம்பந்தம் உண்டா என நோக்குதல் வேண்டும்.ஒழுக்க மேம்பாடு எப்படி அர்த்தமற்று போகும்? நல்ல காரியங்கள் மட்டும் எப்படி பாராட்டுக்குரியதாகிவிடும் என்பது விந்தையாகும். இக் கொள்கைபடி மதர் தெரஸாவும் ஹிட்லரையும் பிரித்து எண்ணத் தேவையில்லை என்பது சரியாகுமா? கடவுளை விமர்சிப்பது என்றாகிவிடுமே. இருந்தாலும் ஒழுக்க எல்லைகளைத் தாண்டி யார் வாழ்வார்கள்? இவன் ஒழுக்கத்தை யாராவது மீறும் போது வாளாவிருப்பார்களா? உலகளாவிய இயக்கம் என்று பார்த்தால் தவறிலிருந்து சரி என்ற இது இட்டுக் காட்டுகிறது.ஒரு நண்பர் பரிசு தருவதும் திருடன் அதைத் திருடிவிட்டுப் போவதற்கும் வித்தியாசம் இல்லை என்று சொல்வது சுத்தப்பொய். ஒழுக்கமில்லாத எல்லையைவிட்டு ஒரு அரசாங்கம் அராஜகமாக இயங்க முடியுமா? அது தகுதி இழந்து மக்கள் ஒழுக்கத்தை மீறி அல்லவா வாழ்வார்கள்?அடிப்படையாக ஏதோ உணர்கிறான் என்றால் பொதுவான நடைமுறையிலிருந்து பிறழ முடியாது. இறப்பு அல்லது கல்லறை வரை கர்மவினை தொடரும் என உணர்த்துகிறது. இது இந்துக்கள் ஒழுக்கமில்லை என்று சொல்லவில்லை. எல்லாரும் அதன்படி நிலையான அடிப்படை இல்லை மாயமாகி உள்ளது.கடைசியாக கடவுள் ஒழுக்கமில்லை என்று சொல்வது பயித்தியக்காரத்தனமாகக் கொள்ளலாம். இந்தக் கொள்கைபடி,“யுயும் ழேn யு யும்” ஒன்றுதான் என்று சொல்வர்.மாயைக்கும் உண்மைக்கும் வேறுபாடு உள்ளது.

தினசரி வாழ்வுக்கும் நம்பிக்கையும் வித்தியாசமாக உள்ளது. ஒருவன் நிலைத்து இல்லை என்பது ஒத:துக் கொள்ள முடியுமா? அவன் நிலைத்து வாழ்ந்தால்தான் அதைக்கேட்கமுடியும் இது வஞ்சப்புகழ்ச்சியாகும்.ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கும் இடத்துக்கும் பரிமாணதுக்குள் முடிவில்லா பொருள் அடங்கி இருப்பதாக சொல்வது கற்பனையே. அது கணிதத்தில்தான் அப்படிமுடியும்.

இதைப்போல் கடவுள் தன்மையும் ஆதி அந்தமில்லாத தெய்வத்தை முடிவுள்ள தெய்வமாக எப்படி காட்ட முடியும்.மனிதர்கள் அவர்கள் சொந்த எண்ணத்தின் மீதே நம்பிக்கை வைக்க முடியாது. அவர்கள் போதகர்களே, நூல், தரும் உள்ளடக்கத்தை அது கூறும் மாயையைச் சார்ந்து அந்த நம்பிக்கை இருக்கிறது.நான் அது இயற்கைக்கு அப்பாற்பட்ட, ஆதாரமாக ஒழுங்கின்மை என சந்தேகபடுகிறேன். ஏனெனில் தினசரி வாழ்வியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. அவர்கள் கருத்தை வலுப்படுத்தும் ஆதாரம் இல்லை. சாலையில் இருபக்கமும் வாகனம் வருகிறதா என்று பார்க்காமல் வாகனம் கற்பனை என்றெண்ணி யார் சாலையை கடப்பார்கள்? அதைப் பார்க்கும் போது ஆயவசiஒ விஞ்ஞான படம் ஹாலிவுட் படைப்பு, அது காட்டிலும் இயற்பியல் சார்ந்ததை அதிகம் நம்பமுடிகிறது.நாம் கனவுலகில் வாழ்கிறோம் என்பது சரியில்லை. அது உண்மை அல்ல. இது உண்மையற்ற தத்துவம் ஒருவரின் ஆளுமைதன்மை, அறிவு, உணர்ச்சி எல்லாமே மாயை.கடவுளின் எளிய தன்மைக்கு இக்கொள்கை எதிராக உள்ளது.தன் உணர்வு இல்லாத நிலையில்தான் அப்படி இருக்கமுடியும். அண்ட முழுமையான இயல்புக்கு ஆதாரம் தேடுவது சிக்கலானது.

Atheist and Agnostic

கடவுள் ஒரு மரமோ, கல்லோ என்று சொல்வதால் மனித இனம் மிக பின் தங்கி உள்ளது. மறுபிறப்புக்குப் பின்னால் போவது கடவுளோடு ஒன்றுவது போலிருக்கிறது.இந்துக்கள் தன் சொந்த சமுதாயத்தையே இரக்கமின்றி தலித் என்று சொல்லி மனுசனுக்கும் கீழாக நடத்துவது இந்தக் கொள்கைக்கு எதிரானது. மனுஷன் கடவுளின் பிரதிநிதி.அவனை இழிவாகக் கருதுவது கடவுளை இழிவாகக் கருதுவது.

எல்லாப் பாதைகளும் கடவுளிடம் இட்டுச் செல்கிறது என்று கூறும் பக்தர்கள், பிறர் தத்துவங்களையும் மதத்தையும் வன்முறையாக ஏன் எதிர்க்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் கலாசாரத்துக்கு கீழாகவோ அந்நியமாகவோ நினைக்கிறார்கள்.

எல்லா வழிகளும் கடவுளிடம் வழிநடத்தும்

இந்தக் கொள்கையோடு வாழ்க்கையை வேதனையோடும் கஷ்டத்தோடும் நடத்துவது எப்படி என்றால் ஒரு பெரிய வீடு அல்லது நிறுவனத்தை ஒரே ஒரு கோடு வரைவது போன்றது. வட்ட வடிவ துளைக்குள் சதுர வடிவ பொருளை கஷ்டப்பட்டு முளையடிப்பது போன்றதாகும் அது சரியாக வராது.இயேசு அப்படிப்பட்டவர்களை இல்லாததை இருப்பது போல் நடிக்கும் மாயக்காரர்கள் என்றழைக்கிறார்.

இந்தத் துயரமான, தோல்வியான வாழ்வுக்கு ஒரு முடிவு உண்டு. நீங்கள் உண்மையானவரோ இல்லையா ஆனாலும் பரவாயில்லை. இந்து சமுதாயம் மிகவும் முன்னேறி அதன் கருத்துக்களும் தெளிவாகவும் இருக்கும்போது ஏன் சமூகம் மட்டும் எதிர்மறையாக உள்ளது? ஏன் அந்தக் கொள்கையுடையோர் விழி இழந்தும தொழு நோயாளராயும் வருந்தி நிற்கின்றனர்?

இதற்கு வேதம் கூறும் உண்மையான வலிமையான கருத்துக்களை எடுத்துக்கூற விரும்புகிறேன் வாழ்வின் சத்தியத்தை விளம்பும் சரித்திரம், பௌதிகம், மெய்ஞானம் ஆகியவற்றைப்போன்று மனுக்குலத்தை படைப்பின் சிகரமாக தன் சாயலில் உருவேற்றி, பாதுகாக்கிற தெய்வம் உண்டு. ஆனால் அவன் வஞ்சனையாலும் பாவத்தாலும் தெய்வத்தை விட்டு வேறு பிரிந்தான். நன்மை தீமை அறியக்கூடிய நல்லொழுக்கத்தின் பிரதிநிதியாகப்படைத்தும், பாவத்துக்கு இடம் தந்து தன் மேலான உயரிய நிலையை இழந்தான்.

அவனை மீட்டெடுக்க இயேசு இரக்கமுள்ள மீட்பராக இவ்வுலகுக்கு வந்தார். மனுஷ ரூபமெடுத்து, மனுக்குலத்தை மீண்டும் தன்னிடத்தே சேர்த்துக்கொள்ள பாடுபட்டு இப்பூலகில் வாழ்ந்து, அனைவர் பாவங்களையும் சுமந்து தீர்க்கும் தேவாட்டுக்குட்டியாய், சிலுவையில் மரித்தார். அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டு தன் மீது நம்பிக்கை வைப்போருக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நல்குவார். நித்திய நித்தியமாக அவரோடு வாழ்கின்ற பரலோக பாக்கியமும் தருவார். பாவம், சாபம், வேதனை எல்லாவற்றிலும் விடுதலை தருவர்

நற்கிரியைகள் புரிந்தோருக்கு நற்பயனான மோட்சமும், தன்னை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும் இரட்சிப்பின் மேன்மையும் அளிப்பார்.

யோவான் 8: 36
ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.

மத் 11 : 28,30
28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

29. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

30. என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

 

 

கடவுளோடு எப்படி உறவுகொள்வது

இந்து மத ஆதாரங்கள்

தமிழ்-Tamil

The Illusion of Pantheism

 

 

 

Holman QuickSource Guide to Christian Apologetics, copyright 2006 by Doug Powell, ”Reprinted and used by permission.”

ஆசார ஒழிப்பும் சுத்திகரிப்பும்

Saturday, December 6th, 2014

உலகிலுள்ள முக்கிய மதங்களைப் பார்க்கும் போது சுத்திகரிப்பு என்பது சராசரி வாழ்வோடு ஒட்டிய குழந்தை பிறப்பு, தீட்டு, வாயு, தூக்கம், புணர்ச்சி சுயநினைவு இழத்தல், இரத்தக்கலப்பு, வாந்தி, விந்து நோய் முதலியன போல் அதுவும் இடம் பெறுகிறது.

இந்த சுத்திகரிப்புகளுள் பகாய் நம்பிக்கை தவிர மற்றவர்கள் தங்கள் உடம்பை நீருக்குள் மூழ்குகின்றனர்.

யூதர்கள் ஆசாரப்படி கைகளைக் கழுவுகின்றனர். இஸ்லாமியர்கள் குசலும், வதுவும் செய்கின்றனர். இந்துக்கள் புனித கங்கையில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டு அச்சமானாவும், புண்ணியவசனமும் செய்கின்றனர். இந்தோயிஸ்ட் மிசோகியும் அமெரிக்கா வாழ் இந்தியன் (ளறநயவ டழனபந) கொண்டுள்ளனர்.

உலகப் பார்வையில் பல வித்தியாசங்கள் இருந்தாலும் அழுக்கை நீரில் மூழ்குவதன் மூலம் அவர்கள் பாவங்கள் கரைவதாக நம்புகின்ற ஒற்றுமை எல்லோருக்கும் உண்டு. இந்த சுத்திகரிப்பின் விழிப்புணர்வு எல்லா மதங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது

எப்போது சுத்தமாக இருக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு உந்துதலோடு இவ்வாறு சுத்திகரித்துக் கொள்வது நடத்தையில் ஓழுக்கத்தை உருவாக்குவதால் இது மத உணர்வாக உருவேற்கிறது.

‘சுத்தம் தெய்வீகத்திற்கு அடுத்தது‘ என்ற பழமொழியை உயிப்ப்பிக்க வைத்தது. உடம்பார் கோயிலில் தண்ணீர் தூய்மைபடுத்தும் கருவியாக மாறியது. தண்ணீரில் மூழ்குவதே அகத்துக்கு வலியூட்டும் ஆசாரமாயிற்று. ஆனால் இந்த தற்காலிக சுத்தப்படுத்துதலின் பலன் சிறிது காலமே நிலைக்கும். குறுகிய காலம் கழிந்து மீண்டும் தங்கள் பாவங்களைப் போக்க அகத்தின் தீட்டைத் துடைக்க கழுவி சுத்திகரிக்க வேண்டிய கட்டாயம் சேர்கிறது.

எவராயினும் குளிப்பதும் துவைப்பதும் உண்மையான சுத்தத்தை அகமும் புறமும் பெற்றிட இந்த அற்பமான தோல் ஆiமான சிகிச்சைக்கு உள்ளாகிறது.

இதனால் மேற்பரப்புக்கு அடியில் உள்ள மாம்சீகத்தில் அழியாத ஜீவனுள்ள ஆன்மீக நலனுக்கு இதனால் என்ன நன்மை கிடைத்திடும்?
ரபீ யேசுவா தன் யூத மக்களை நோக்கி இவ்வாறு பேசுகிறார்.

மத்தேயு 15: 1,2,11,17-20
1. அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து:

2. உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள்.

11. வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

17. வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?

18. வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

19. எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.

20. இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.

புற ஒழுக்கைத் தவிர்த்து அக அழுக்காகிய ஒழுக்கசிதைவையும் பரிசுத்தமற்ற பாவ நிந்தையை களைய உள்ளார்ந்த மனஸ்தாபம் அடைந்து நீக்குவதே முக்கிய அறிவின் வெளிப்பாடு. ஷேக்ஸ்பியர் நாடகத்தில் லேடிமேக்பத் ‘பேய்பிடித்த இடமே வெளியே போ “ என்று கத்துகிறாள். டங்கன் அரசனின் இறப்புக்குத் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியடைய தன் இரத்தக்கறை படிந்த கைகளைக்கழுவி கறை நீங்குபடி கத்துவாள்.

இவ்வாறு கழுவுவது மூலம் தான் அழுக்காயிக்கிறேன் என்று மறைமுகமாக உணர்தலுக்குத் தூண்டுதல் எனலாம். மனித ஆற்றலுக்கு முடிந்த அளவு மேற்கொள்ளும் சுய முயற்சியே இது. தன் ஒழுக்கதோல்விகளை சரிசெய்யும் சிறிய முயற்சியே இது. இதன் மூலம் தங்கள் விருப்பம் நிறைவேறும் பக்தியின்பாற்பட்ட ஆசாரம் வெளிப்படும். இதைக் கடைபிடிப்பதால் தோன்றும் வைராக்கியம் அதனால் ஏற்படும் மனநிறைவே போதும் என்றெண்ணுகின்றனர். தன் நிலை உயர்த்தும் அங்கீகாரத்தின் வழியாக இதை நம்புகின்றனர்

தேய்ப்பதும், கழுவுவதும் மேற்பூச்சை மெருகூட்டும் ஆவி ஆத்துமாவும் பிழைத்தேற என்ன வழி என்ற ஆழமான அறிவு சாதாரண மானிடனுக்கு ஏன் புலப்படவில்லை. பச்சை குத்திக் கொள்ளும் அடையாளங்கள் போல் தேங்கிநிற்கும் பாவங்களை அழிக்க வேண்டாம்.

கடந்த காலமும், எதிர்காலமும் மீட்சிபெற இந்தச் சுத்திகரிப்பு வழி வகுக்குமா? எல்லா மனித உயிர்களும் உண்மை மனச்சாட்சியின் தவிப்பு இருந்து கொண்டுதான் இருக்கும் நியாயதீர்ப்பு நாளில் தன் பங்கைப் பெற்றிட விழிப்பான வாழ்வைத் தேர்ந்தெடுக்க வேண்டாமா?

ரோமர் 2:14 – 16
14. அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.

15. அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.

16. என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

அழிந்து போகும் மாயைக்கு முக்கியத்துவம் தந்திடாது, வெளிச்சமான பாதைக்கு நேராக நம் பயணத்தைத் திருப்பிக் கொண்டு போக இந்த விழிப்புநிலை உதவும்? கடவுள் இல்லை என்பவன் மரத்து உளுத்துப்போன மரம் போன்றவன் அவனைத் துளிர்த்து உயர் மீட்சி பெறச் செய்ய இத்தகைய வெற்று ஆரவார ஆசாரங்கள் மட்டும் எதிர்த்து வெல்ல முடியுமா? அவன் வாழ்வை வெறுத்து சலித்து மதமாகிய இந்தச் சாலையில் பெலமற்றவன் விழுந்து கிடக்கிறான் இந்தப்பாதை எங்கேயும் கொண்டுபோய் விடாது என்ற பிதற்றித் திரிகிறான். இப்படிப்பட்டவர்களுக்காக ஒரு இடம் இருக்கிறது. அதற்கு வழி தானாக தேடி மாய்ந்து போகிற மனுக்குலத்தை மீட்க ஒரே திர்;வு கர்த்தர்தான். அவரே தன் சிருஷ்டிக்காக உயிரைக் கொடுத்து விலை கொடுத்தவர் அவரைத் தேடிப் போக வேண்டாம். அவரே தேடிவருவார். நீங்கள் அவர்மீது நம்பிக்கை வைத்தால் அவர் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார். இருபக்கமும் பயன்பாடுடைய வலிமை மிகு பொழிவில் அவன் இளைப்படைவதில்லை. பெலமற்ற அவன் பெலவானாகிறான்.

இந்த மெய்யான சுத்திகரிப்பு அவனுக்குள் அற்புதம் நிகழ்த்துகிறது. இது ஆண்டவரின் இலவசபரிசு இதனால் தெய்வத்தோடு ஒன்றிப்போகிறான். ஆராதனை செய்யும் அற்புத ஆற்றல் அவனுக்குக் கிடைக்கிறது. அவன் வழிகள் எல்லாம் வாய்க்கிறது.

தீத்து 3:5
5. நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

ரோமர் 6 : 23
23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன

எபேசியர் 2: 8-9
8. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

9. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

1யோவான் 1:7,9
7. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்

உண்மை மனஸ்தாபம் இன்றி தண்ணீர் ஞானம் பெற்றுக் கொண்டால் வெறுமனே குளித்தது போல் தான் அறிக்கையிட்டு உண்மையாக தண்ணீர் ஞானஸ் நானம் பெற்றவனிடத்தில் விசுவாசம் மையம் கொள்கிறது. பரிசுத்தமான இயேசுவின் விலையேறப் பெற்ற இரத்தமே உங்களை மீட்டெடுத்து விட்டது. மறுபிறப்பாகிவிட்ட உங்களை பரிசுத்த ஆவியானவர் சிந்தை எண்ணம், செயல் அத்தனையிலும் மறு ரூபமாக்குவார்.

இது நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சலந்து திரவமாகும் சாதாரண சேர்க்கை அல்ல. உள்ளே மிகப்பெரிய மாற்றத்தை உலகோர் காணும் வெளிச்சத்தை ஞானஸ் நானம் அளிக்கிறது. இதன் மூலம் இரட்சிப்பு என்னும் பரிசை இலவசமாக அருளுகிறார் தேவன். தண்ணீரில் மூழ்கி எடுப்பதால் மாத்திரம் இது நிகழவில்லை. பரலோகமே சாட்சியிட்டு மகிழ்கிறது. குழந்தை கருக்கொண்டு உருவாவதுபோல், இந்த இரட்சிப்பு அவரால் வந்தது. மனிதனின் சித்தத்தாலே பக்தியான செயல்களோ இது வருவது இல்லை. தேவன் முன்குறித்து அளவில்லாத தயவினால் மேலிருந்து அனுப்பும் மாபெரும் ஈவு.

இந்த மறுபிறப்பு இந்து, புத்த மதங்கள் விவரிக்கும் மறுபிறப்பு அல்ல.

வேதம் சொல்கிறது

எசேக்கியல் 36:25 – 27
25. அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.

26. உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

27. உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.

ரவியேசுவா கூடாரபண்டிகையின் போது சுக்கோத்தில் நிகழ்ந்தது போல் என்கிறார்.

யோவான் 7.37-39
37. பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.

38. வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

39. தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை.

பலிசெலுத்துவது தற்காலிக திருப்தி அளிப்பது வெறும அடையாளம்தான் ஆனால் அது மறுபிறப்பின் உண்மை அல்ல.
பலிசெலுத்த அவசியம் இல்லை. அவரே ஆட்டுக்குட்டியாக பலியானார். ஜெபமும், உபவாசமும், நல்ல காரியங்களும் செய்தால் போதும் என்று யூதர்கள் எண்ணுகின்றனர். இது உடன்படிக்கையை மீறுவதாகும்.

டோராவில் இஸ்ரவேலர் மறுதலித்த நிகழ்ச்சிக்கு ஒப்பானது.

லேவி 17:11
11. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.

மிட்ஸவாட் எத்தனை செய்தீர்கள் என்று கணக்கில்லை? என்று சொல்வது எத்தனை? உன் பாவம் மன்னிக்கப்ட்டது. ஏசாயா 53ல் சொல்வதுபோல் போதும் இஸ்லாமியர் இயேசுவின் இறப்பை மறுக்கின்றனர் ஆபிரகாம் ஈசாக்கை பானபலியாகக் கொடுத்ததுபோல், மெசியாவை பலி கொடுத்தார். சிலுவையின் அவமானம், செய்யாத பழிக்கான நிந்தை எல்லாமே தன் பிள்ளைகளுக்காக சகிப்புத்தன்மையால் மகிமையாக மாறச் செய்தார். அதனால் நாம் பிழைக்கிறோம். எபிரேயர் 2-9-28: 12-2 அவர் உங்களுக்கு ஜீவத்தண்ணீர் தருவார் அதனால் திருப்தி அடைவீர்கள் அது உங்கள் ஆத்துமாவை உயிர்ப்பிக்கும் பிதாதண்ணீர் தரலாம் ஆனால் குடிக்க வைக்கமாட்டார்.

Jesussandjews.com/wordpress/2011/07/14/crucification-of-jesus-christ-and-islam/

சமாரிய பெண்ணுக்கு ஜீவத்தண்ணீர் தருவேன் என்றவர் உங்களுக்கும் நிச்சயம் தருவார்.

ஆவிக்குரிய தாகத்தை அவர் நிரப்பி உயர்ப்பிப்பார்.

கள்ளத்தீர்க்கதரிசிகளும் தாகம் தீர்ப்பர் ஆனால் திரும்ப தாகம் ஏற்படும் நாவறளும்

யோவான் 4:10, 13,14
10. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.

13. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.

14. நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.

மத் 11: 28-30.
28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

29. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

30. என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

 

 

 

கடவுளோடு எப்படி உறவுகொள்வது

இந்து மத ஆதாரங்கள்

தமிழ்-Tamil

Ritual cleansing and purification

இந்துமதமும் மறுபிறப்பும்

Saturday, December 6th, 2014

இறப்புக்குப் பின்னர் அமையும் வாழ்க்கை செய்த பாவபுண்ணியத்துக்கேற்றாற் போல் அமையும் என்று நம்புவதே. இந்துக்களின் வாழ்க்கையில் பிறப்பு, இறப்பு, மறுபிறப்புக்கள் ஆகியவை சம்சாரம் என்ற பெயரில் சுழற்சியாக ஒருவர் முந்தைய பிறவியில் செய்த பாவபுண்ணியங்களின் நேரடி விளைவே என்று நம்புகின்றனர். இந்தச் சம்சாரத்தில் எப்படியாவது மோட்சம் அல்லது முக்திபயன் அடையவேண்டும் என்று ஜீவிக்கின்றனர். அதுதான் இரட்சிப்பின் இன்னொருவடிவு. போவதும் வருவதுமாகிய வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து விடுபட்டு, பரிசுத்தம் பெறுவதே அவர்கள் நோக்கம்.

இந்த முக்தி நிலை அல்லது இரட்சிப்பை அடைய ஒருவர் கடினமாக யோகா செய்வர். ஞானம், தியானம், கிரியைகள் மூலமாக உலகபந்தங்களிலிருந்து விடுதலைபெற வேண்டுமென்று அப்படிச் செய்வர்.

மத நம்பிக்கைகளுள் கலாச்சார நம்பிக்கை என ஏற்றுக் கொண்டு, வழக்கமாக இச்செய்கை என நினைத்தாலும் அதை நிரூபிக்கப்படவில்லை. நான் சமீபத்தில் மரணத்துக்குப் பின் வாழ்வு என்ற வெப்சைட் வெளியிட்டிருந்தேன். அதில் உலகமெங்கிலும் அந்தச் செய்தி குறித்து ஆராய்ந்து வந்த சிலர், மருத்துவர் பேட்டிகள் வெளியிடப்பட்டிருந்தது. அதில் மரணத்துக்குப்பின் வாழ்கிறவர்கள் பைபிளில் சொல்லப்பட்ட நியாயத்தீர்ப்புப்படி அடையும் நரகவாழ்;வோ, மோட்சவாழ்வோ மேற்கொள்வதாக கூறி இருந்தார்கள்.

jesusandjews.com/wordpress/2009/10/29/is-hell-real/

இந்துக்கள் தீமையின் கஷ்டத்தையும் நன்மையின் பலனையும் அறிகிறார்கள. ஆனால் சாவின் விளிம்பிலுள்ள சில அனுபவங்கள் வேத ஆதாரத்துடன் கூறியதுபோல் மாறுபடுவதாய் உள்ளது. ரோமர் 1,2 அதிகாரங்களில் எப்படி மனிதனுக்கு ஒழுக்கத்தை அளக்கும் பாராமீட்டரை உடம்போடு பொருத்தி இருக்கிறார் என்பதைக் காண்கிறோம். சரி என்றும் தவறு என்றும் நமக்குகாட்டி நீதி என்றும் நியாயத்தீர்ப்பு என்றும் உணர்த்திக்கொண்டு இருக்கிறது. இந்த அறிவு பொதுவானது. ஆனாலும் இருவிதமாய் யோசிக்கும் போது இந்துநம்பிக்கைகளும் கிறிஸ்துவமத நம்பிக்கைகளும் ஓன்றுக்கொன்று முரண்படுகின்றன.

வேதாகமம் நமக்கு மனிதன் ஒருமுறை இறந்து நியாயத் தீர்ப்பை எதிர்கொள்கிறான் என்றும் இந்து அந்த ஆன்மா புதுவாழ்வு பெற்றுதான் ஆசித்தபடியே வேறு ஒருபிறவியாக உச்சநிலையில் இறுதியாக முழுப்பயன் அடைகிறது என நம்புகின்றனர்.

இந்துமதத்தைப் பற்றி உலகளாவிய பார்வையில் சிலசிக்கல்களை கவனித்தேன். மனிதவாழ்வினில் தூய்மையில் முரண்பாடும் தெளிவின்மையும் கண்டேன். சிலமிருகங்களையும், மரங்களையும், மனிதர்களைக் காட்டிலும் மரியாதையுடன் நடத்துகின்றனர். இந்தியாவில் ஐந்தில் ஒன்றுபகுதியான ஜனத்தொகையாக இருக்கும் தலித் மக்களை தீண்டத் தகாதவர் என்று முத்திரை குத்;துவதைக் கூறுகிறேன்.

இந்த இனப்பகுப்புமுறை சிலவழிகளில் அடிமை முறையாகிவிட்ட இந்தவழக்கம் அரசாங்கத்தால் ஒழிக்கப்பட்டாலும,; பெரும் பான்மையான இந்துக்களால் இன்னும் வழக்கத்தில் உள்ளது.

இந்தமதக் கொடுமைஅரசியல் சமூகஅமைப்புகளுக்கு தங்கள் கலாசாரத்;தை மேம்படுத்த இந்தமக்களை வேலையாட்களாக வைத்துக் கொள்ள நினைத்தால் தலித் மக்களை தாழ்த்தி அடிமைப்படுத்தினர். அது அரசாங்கத்தின் தேவையான தீச்செயல் ஆனது.

இந்தமக்கள் முற்பிறவியில் செய்தபாவங்களின் நிமித்தமே இவ்வாறு தாழ்ந்தசாதியில் பிறந்திருக்கிறார்கள். ஆதலால் இந்த தலைவிதியான அடிமை வாழ்வு அவசியமே என்ற கருதுகின்றனர். சமூதாயத்தின் ஒடுக்கப்பட்ட இவர்களுக்குத் தீமைசெய்வதையும் தாக்குவதையும் அகிம்சை கோட்பாடு தடுக்கவில்லையா?

கிறிஸ்தவ மிஷனரிகள் தலித்துகளிடம் அன்பைப் பகிர்ந்து கடவுள்தான் எல்லா மக்களையும் படைத்தார் என்ற பெரிதான கருத்துக்களைச் சொன்னார்கள். ஆனால் இந்துக்களோ தலித்து மக்களையும் கிறிஸ்தவ மிஷனரிகளையும் அகிம்சையை விட்டு விட்டு தாக்கியும் தீமைசெய்தனர் அவர்கள் தங்கள் வழக்கத்தை எதிர்க்கும் கட்டுப்பாட்டை மேற்கொள்ளமுடியாமல் போனபோது தந்திரமான நடவடிக்கையால் வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் மதக்கொள்கைக்கேற்ப சமாதானம் செய்பவர்களாயிருந்திருக்கலாம் இதே இந்துக்களுக்கு மாமிசம் சாப்பிடாததுதான் அகிம்சையா? இந்துக் கடவுள்களுக்குப் பலிசெலுத்தக் கூடாதென்று கீழ்சாதி மக்களைப் பலி செலுத்துதல் தவறில்லையா? அதனால் அக்கடவுள்கள் திருப்தி அடையுமா? நம்புகிறார்கள். ஆனால் இன்னொருபக்கம் உலகம் எல்லையுள்ளது என்று நம்புகின்றனர்.விஞ்ஞானமும் டெலஸ்கோப் வழியாகக் கண்டு அதை ஏற்றுக்கொள்ளகிறார்கள். அண்டவெளி ஆய்வுகள் விரிந்துகொண்டே போகிறது. வளர்ச்சி நிலை (வுhந டீபை டீயபெ) ஆக இருக்கிறது. இந்தக் கருத்தை ஊக்குவிக்க இந்த எல்லையுள்ள இடத்தில் ஆத்மாமட்டும் உயிர்வாழ்வதாகச் சொல்வது அறிவுடையாகுமா? இதே கூற்றுப்படி பார்த்தால் ஆதிமனிதர்கள் எவ்வாறு முன்வினைபயனாகத் தோன்றி இவ்வுலகுக்குள் வந்தனர்? அவர்கள் முன்பு வாழவில்லையே அவர்களுக்கு முற்பிறப்புவினைகள் இல்லையோ.

கடவுள் ஒரு பேரண்டமாகி இருந்து மோட்ச நடவடிக்கைகளால் சிறு துண்டுகளாக்கி சேர்த்து வைக்கிறோமா? ஒரு துவக்க எல்லையைக் காட்டும் போது முதல் பிறப்பு எங்கேயிருந்து வந்தது? வாழ்க்கையேஎங்கேயிருந்துஆரம்பித்தது? நாம் எப்படி இந்தவாழ்வின் பாவபுண்ணியத்துக்குப் பொறுப்பேற்கமுடியும்? முற்பிறப்பில் செய்தவினைகளுக்கு ஏற்றாற் போல்தானே அனுபவிக்க வேண்டும்? முற்பிறப்பில் செய்தவற்றிற்குப் பரிகாரமாக இந்த வாழ்வில் செய்து விட்டதாக எப்படி தெரியும்?

ஒருவன் எங்கேபோவான் ஒருவன் எங்கேபோய் முடிவடைவான் என்று யாருக்குத் தெரியம்? கடைசியில் மோட்சம் அடைய ஒருவனுக்கு திடமான திட்டமே இல்லாமல் இருப்பான் இது ஒருவனுக்கு நம்பிக்கையின்மைதான் தரும.; ஒரு தனிப்பட்ட மனிதன் இந்த நம்பிக்கையின்மையோடு அவர்களால் யோகா போன்றவை செய்ய முடியாமல் போனால் என்னவாகும்? மிருகங்கள், பூச்சிகள், எலி போன்ற பிறந்துவிட்டால் என்னசெய்வது?

உலகின் ஆவிக்குரிய நிலையின் உச்சமாக இந்து மதம் இருக்கிறது. ஏனெனில் நிறையகுருக்கள் நம்மிடம் இருக்கிறார்கள் இந்தக் கோணத்தில் பார்த்தால் கர்மவினையாளர்களில் நிறையபேர் நம்மிடம் இருக்கின்றார்கள்? உலகில் மூன்றில் இருபங்கு தொழுநோயாளிகளும் பார்வையற்றவர்களும் நம்மில் இருக்கிறார்கள்? இறுதியாக, இந்த உடைந்த நம்பிக்கையின் சக்கரத்தால் எல்லா பக்தர்களையும் தூக்கிச் செல்லமுடியுமா?

இவர்கள் யாரென்றால் குருக்கள் ஆலோசனைப்படி மோட்சத்துக்கு இட்டுச் செல்லும் வழியாக பசுக்களைக் கொல்;கின்றனர். எல்லாக் கிரியைகளும் மாயையின் பிம்பங்களே.

அது ஒருவனை ஏமாற்றி முழுமையான உண்மையற்ற தத்துவத்தை நம்பவைக்கின்றனர். இறுதியாக, நான் கடினமான கருத்துக்களைக் கூறி இருந்தால் என் இந்து நண்பர்கள் மனதைப்; புண்படுத்தும் விருப்பம் இல்லை என்று பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன். ஆனால், அவர்களை கலாச்சார எல்லையைத் தாண்டி யோசிக்க அழைக்கிறேன்.

அவர்கள் மத நம்பிக்கையில் அமிழ்ந்து போயிருக்கும் நிலையிலிருந்து சிந்திக்க வேண்ணுடுகிறேன். திரும்பவும் யாரையும் புண்படுத்தி இருந்தால் வருந்துகிறேன். ஏற்படுத்தாமல் இயலாது உண்மையைக் கூறும் போது சலனம் நான் என்ன நம்புகிறேன் என்றால் உங்களை ஆவிக்குரிய பயணத்தில் உண்மை இருக்கிறதா என்று பாருங்கள் முடிவாக, எல்லாருக்கும் நம்பிக்கை தராது. இதைச் செய், செய்யாதே என்ற மதக் கொள்கையின்பாற்பட்டதன்று ஆனால் மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களை ஆன்மாவின் வெறுமையை நீக்குவார். குற்றவுணர்ச்சியிலிருந்து மீட்டு, ஒரு புதிய சிருஷ்டியாக்குவார்.

மத்தேயு11:28-30
28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

29. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

30. என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

 

 

கடவுளோடு எப்படி உறவுகொள்வது

இந்து மத ஆதாரங்கள்

தமிழ்-Tamil

Hinduism and Reincarnation

 

 

 

Copyright permission by Bridge-Logos “The School of Biblical Evangelism”

Copyright permission by Random House Inc./Multnomah on New Birth or Rebirth by Ravi Zacharias

இந்து மதக்கடவுள்கள்

Saturday, December 6th, 2014

இந்துமதத்தில் ஒருவருக்குரிய கடவுட் கொள்கை பலதரப்படும். ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசப்படும் அவர்களது நம்பிக்கைகள் மூன்று வகையுள் அடங்கும்.

1. கடவுள் இல்லை.
2. ஒருகடவுள்.
3. பலகடவுள்கள் (330 மில்லியன்)

இந்த வேறுபட்ட கடவுள் பற்றிய கருத்துக்கள் பல பரிமானங்களுள் தரப்படுத்தும் போது ஒரே பொருண்மை(Monism) அனைத்திலும் இருப்பது, (Pantheism) உலகம் கடவுளின் ஒருபகுதி எனில் (Panentheism) பொருள்கள்வணங்குதல் (Animism) இந்த நம்பிக்கைகளை ஆராயும் போது கடவுளைப் பற்றிய வெளிப்பாடு, எதிர்வாதம் தருவதாகவும், தர்க்கங்களுக்கு உரியதாகவும், ஒப்புக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது.

இப்படி மாறுபட்ட கருத்துக்களை எவ்வாறு ஒன்று சேர்த்து சொல்ல முடியும். இந்த சமுதாயத்தில் A யும் A அல்லாததும் இரண்டும் ஒன்றுபோல் துல்லியமாக கடவுளை வெளிப்படுத்துவதாக எண்ணுவது ஏற்புடையதாகுமா? இந்தக் கொள்கைகள் மட்டுமல்ல, பகுத்தறிவு தேடலுக்குரிய அடிப்படை உண்மையன்று, எவ்வாறு மக்கள் அன்றாட வாழ்வில் செயல்பட முடியும்?

இந்து மதத்திலுள்ள கடவுள்கள் புராணங்களின் பின்னணியிலும் பழங்குடியினர் நம்பிக்கைகளிலும் உள்ளதால், சரித்திர நிகழ்வுக்கு மாறாக இருப்பதால் கணிசமாக எடுத்துக் கொள்ள முடிகிற பலமான உண்மை என்று கணிக்க முடிவதில்லை. செவிவழிக் கதையாகவும், புராணக்கதை வடிவிலும் இருப்பதால் அதன் ஸ்திரத் தன்மை குறைவால் மூடநம்பிக்கை என்று எண்ணவைக்கும்.

உலகின் பழையபுராணக்கதைகள் வழங்கும் கிரீக், ரோம, ஜெர்மன், ஸ்லேவிக் நாகரீகங்களின் கதைகளோடு இவையும் வைத்தெண்ணப்படும்போது வெறும் நாட்டுப்புறக் கதைகளாகவும், கட்டுக் கதைகளாகவும், எண்ணப்பட்டு முக்கியமாகக் கருதப்படுவதில்லை.

கடவுள் கதைகள் உணர்ச்சியூட்டும் வலிமையுடையதும், மக்களைக் கவர்வதாகவும் உள்ளவை. கலாசார சூழலில் கடமை உணர்வும் பயபக்தியையும் மேம்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவை. இவை தனிப்பட்ட மனிதனையும், குடும்பம் இனம், சமுதாயம், ஆகியவற்றையும் பாதிக்கிறது. அவை நம்பவதற்கு ஆதாரமில்லாமல் போனாலும் செல்வாக்கு பெற்றவை. ஆனாலும் காலத்தின் வளர்ச்சியில் கதை போன்று நம்பகத்தன்மை இழக்கிறது. இன்னும் இந்த நம்பிக்கைகள் நிலைத்து இருப்பதற்கு பலகாரணங்கள் உள்ளன.

வாழ்வில் ஒவ்வொருகட்டத்திலும் இந்த நம்பிக்கைகளைத் தவிர்த்தல் முடியாதது. அடுத்தவரோடு இணங்கிப்போகும் ஊரோடு ஒத்துப்போகும் வாழ்வியல் நெறிப்படி வாழ்வதாக இருக்கலாம். கலாச்சார பாரம்பரியத்துக்கு மதிப்பு அளிக்கும் பண்பாக இருக்கலாம். சமுதாயத்தில் ஒரு பாதுகாப்புக்கு இந்தப் பங்களிப்பு தேவை என்றெண்ணலாம். விளையாட்டுக் குழுக்கள், அரசியல் கட்சிகள் விசுவாசத்துடனும் பற்றுடனும் கட்சிக்கும் குழுவுக்கும் நன்றியுணர்வுடன் இயங்குவது போலவும் இருக்கலாம்.

உலகப்பார்வையில், நாசிஸத்தின் அக்கிரமத்தால் எல்லாச் சமுதாயங்களும் கலாச்சாரங்களும் ஏமாற்றப்பட்டது என்று கணிக்கப்பட்டது.

ஆதலால் தத்துவரீதியாக எல்லாருக்கும் எல்லாமும் தவறாகவும் முடியும். எல்லாருக்கும் சரியாகவும் முடியாது. நிறைய மக்களால் கடவுட் கொள்கைகளைப் பற்றி யோசிக்க முடியாது. மிகைப்படுத்தி மதிப்பும் சிறப்பும் அளிக்கப்பட்டுவரும் விஷயத்துக்கு எதிரான எந்த முடிவும் எடுக்க முடியாது.

ஆனால் என் இந்து நண்பர்களுக்கு அக்கறையுடன் கூறுவது என்னவென்றால், கலாசார எல்லைகளுக்குள்ளும், வாழ்வின் அடிச்சுவடுகளைப் பதிக்காமல் உண்மைவாழ்வின் தேடலை வேறொரு கோணத்தில் பார்த்து ஆத்மாவினை வெளிச்சத்துக்குள் வழிநடக்க உங்கள் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தனியே நடக்க நேர்ந்தாலும் உங்களை வழிநடத்த ஒரு பேரொளி தீபம் உங்கள் முன்பு இருப்பதை மறவாதீர்கள். இந்த மெய்யான வழியை விட்டு விட்டால், பலரால் தவறாக வழிநடத்தப்பட ஏதுவாகும்.

மத்தேயு 7:13,14
13. இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

14. ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

இறுதியாக, இந்தச்செய்தியை வெளிப்படையாக கூறியதன் நிமித்தம், நான் உங்களை புண்படுத்தியிருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். அநேகம்பேர் இந்த நம்பிக்கைகளை பக்தியாகவும் அர்ப்பணிப்பாகவும், இந்த நம்பிக்கைகளை உடையவர்களாயிருப்பீர்கள். நான் என் இந்து நண்பர்களை கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்த நம்பிக்கைகள் தவறானவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே. வாழ்வின் எந்தச் சுமையாக இருந்தாலும் உங்களைத் தோளின்மீது சுமந்து தாங்கி நடத்தக் கூடிய ஒருவர் இருக்கிறார்.

மத்தேயு 11: 28 – 30
28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

29. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

30. என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

 

 

 

கடவுளோடு எப்படி உறவுகொள்வது

இந்து மத ஆதாரங்கள்

தமிழ்-Tamil

gods of hinduism

எல்லாப்பாதைகளும் கடவுளிடம் கூட்டிச் செல்லும்

Saturday, December 6th, 2014

ஒன்று போல் தோன்றும் மதம் பற்றிய கருத்துக்களை கடவுள் என்ற ஓரே வரிசையில் வைத்து சிலர் எண்ணுவர். டைட்டானிக் கப்பல்போல் மதவேறுபாடு என்ற தண்ணீரில் பயணம் செய்து மேற்பரப்பிலுள்ள பனிக்கட்டிகளை மட்டும் பார்த்து மிஞ்சிய நம்பிக்கையுடன் அடியில் உள்ள பெரிய அழிவை நினைக்காது துறைமுகத்தில் பத்திரமாக கரைசேராததுபோல் அழிவுக்குள்ளாத பாதுகாப்பு என்றெண்ணி சிலர் அமிழ்ந்து போகின்றனர்.

வௌ;வேறாகப் பிரிந்து இருக்கும் இத்தகைய மதரீதியான கருத்துக்களை நிறையபேரால் அறிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது.எல்லா மதங்களையும் ஒப்பியல் முறையில் படித்தால் ளழயெச போல் குறிப்பிட்ட வேறு பாடுகளை மட்டும் பார்ப்பர்.

தன்மதம் ஏற்றுக் கொள்ளும் கருத்துக்களை மட்டும் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பர். ஒவ்வாத கருத்துக்களை எதிர்ப்பர். அன்றாட வாழ்வில் அதன்படி நடக்க எத்தனிப்பர். தர்க்கமும் பகுத்தறிவும் கொண்டு சீர்தூக்கிப் பார்ப்பதில்லை. முழுவடிவத்தையும் அறியாது வெளிச்சுற்றுப் பகுதியில் நின்று வாழும் ஆபத்தை அவர்அறியார். தம் கருத்தில் மூழ்கி இருப்பவரால் வெளி மதத்தின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது இயலாத ஒன்றாகிறது. கீழை நாட்டுக் குருக்கள் மேல்நாட்டு மக்களை தங்கள் கொள்கைக்கேற்ப மாற்றி வருகின்றனர்.

கடவுட் போட்டியின் பதட்டத்தைப் போக்க பாதைக்கு நடுவே பாலம் அமைத்து பழைய மதத்தை மேம்படுத்த எண்ணுகின்றனர். தாம் சென்ற பாதையை விரிவுபடுத்த விரும்புகின்றனர். மந்தை உணர்ச்சியுடன் பலகடவுட்கொள்கைகளை ஏற்று நடக்க யத்தனிக்கின்றனர். இது அறியாமையில் சிகரம் ஏறி கீழே விழ ஏதுவாகும்.

பார்வையற்றவன் கடவுளைப் பார்த்ததாகச் சொன்னால் அவன் பொய் சொன்னதாகவோ ஏமாற்றியதாகவோ கொள்ள முடியாது. இந்த மாதிரியான கருத்துக்கள் ஒருவரின் கடவுள் நம்பிக்கையை தவறான வழியில் இட்டுச் சொல்லும். மனுக்குலத்தில் கடவுட் கொள்கை பொதுவாக உள்ளது.

நம் வாழ்வு முழுச்சட்டத்தைப் போன்றது. மற்றவர்கள் அவரவர் சுயவிருப்புக்கேற்ற கருத்துக்களை அதில் அடைக்கின்றனர் அவர்கள் பொய் சொன்னதாகவோ ஏமாற்றியதாகவோ எண்ண முடியாது. குருசாதுமத ஆசிரியர், யோகி இந்த ரீதியான கருத்துக்களை வழங்குகிறார்கள்.அவர்கள் உண்மையான கடவுள்நிலையைத் தொட்டதாக அனுமானிக்க முடியாது.

மத்: 24:24
ஏனெனில் கள்ளக்கிறிஸ்துகளும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

படைத்தவரின் சாயலுக்கேற்ப படைக்கப்பட்ட சிருஷ்டி பல வடிவங்களைத் தம்விருப்பிற்கேற்ப படைத்து ஆராதனை செய்வதா?

ரோமர்: 1:18-23
18. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

19. தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

20. எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.

21. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

22. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,

23. அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.

முடிவாக, கடவுள் பற்றிய எல்லார் கருத்துக்களும் சமமான மதிப்புடையவை. ஆனால் எல்லார் கருத்தும் முழுமையாய் சரியானது என்று சொல்ல முடியாது.

பொதுவாகச் சொல்லப்போனால் எல்லா வெளிப்பாடும் பெரிய முழுப்பகுதியின் சிறுபகுதியே.

இந்துக்கள் சிறப்பானதும், தங்களுக்கே உரியதெனப் பாராட்டி முக்கியத்துவம் தருகின்றனர். வேறு கூட்டத்தாரோடு இணைந்து மற்ற மதங்களோடு இசைந்து போவதில் எந்தச் சிக்கலும் இராது. நம் கருத்துக்களில் சிறிய உண்மையையே நமக்கு எல்லாருக்கும் தெரியும்.ஆனால் போதுமான ஆதாரம் இருப்பதாக எண்ணிக் கொள்கிறோம். இறுதியாக எல்லா நம்பிக்கைகளும் சமமானவை.

மதவிஷயத்தில் பொறுமையாயிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் உண்மையான மதரீதியான மேம்பாட்டை அது விளைவிக்காது பொறுமையைவிட உண்மையும் அன்புமே வெல்லும் நிறைய பாதைகள் நமக்கு முன்னே விரிந்து காணப்படலாம் ஆனால் ஒரே வழி நித்திய ஜீவனை அடைய வழிகாட்டும். யுகயுகமாய் ஆனந்தமாய் வாழச் செய்யும் அந்த அற்புத வழியில் நீங்கள் செல்ல வேண்டும்.

வேதம் இரு வழிகளைச்சுட்டிக் காட்டுகிறது. அழிவுக்குள் அழைத்து செல்லும் வழி விசாலமானது. அடுத்தது ஜீவனுக்குள் அழைத்துச் செல்லும் வழி குறுகிய வழி

நடக்க கால்கள் இருப்பது போல் வாழ்வைத் தேர்ந்தெடுக்கவும் நமக்கு உரிமை இருக்கிறது.

நான் உங்களைக் கேட்கிறேன். அழிவுக்குள்ளான அகல வழியா? வாழ்வுதரும் குறுகிய வழியா?

இயேசு ‘நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்’ என்றார். முழு இருதயத்தோடும் அவரைத் தேடினீர்களானால் உங்கள் ஆவிக்குரிய கண்களைத் திறந்து அந்த வழியைக் காட்டுவார். அழைத்தும் செல்வார்.

மத்தேயு 11: 28 – 30
28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

29. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

30. என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

 

 

 

 

கடவுளோடு எப்படி உறவுகொள்வது

இந்து மத ஆதாரங்கள்

தமிழ்-Tamil

All Paths Lead to God

இந்துமதத்தின் அற்புதங்கள்

Saturday, December 6th, 2014

இந்துக்களில் பலர் தங்கள் நம்பிக்கைகளில் உண்மையாயிருப்பார்கள்.

தங்கள் மத வேண்டுதல்களின் அடிப்படை உண்மையைப் பார்க்கும்போது அதுதவறு. 1995ல் ஒரு நிகழ்ச்சி சிலைபால் குடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்து பக்தர் ஒருவருக்கு கடவுள் கணேசனுக்குப் பால் கொடுத்தால் குடிப்பார் என்று கனவு வந்தது. அந்தச் சிலை குடித்தது என்று நினைத்தார்.

இதனால் உலகமெங்கும், இந்தியாவிலும் உலகமெங்கும் உள்ள எல்லாக் கோவில்களிலும் தீவிரமாக பால் அபிஷேகம் செய்தனர். அதைப்போன்று பால் குடிப்பது போன்று அற்புதம் நிகழ்ந்தது.

அப்படி இருந்தும் அது அற்புதம் இல்லை என்று நிரூபித்தனர்.

அது பௌதிகத்தினால் ஏற்படும் மயிர்த்துளாக்கம் (ஊயிடைடயசல யுஉவழைn) என்று நிரூபித்தனர். ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியைப் பார்த்தேன். எல்லா மதத்திலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் போட்டுக் காட்டினர். அதில் மிக்கிமவுஸ்க்கு பால் தந்தபோது அது குடித்தது. சிலை பால் குடித்தது அது உண்மை அல்ல என்று நிரூபித்தனர்.

எனக்கு அருகிலுள்ள இந்தியர் முகத்தில் தவறான அனுமானம் என்று தெரிந்ததும் ஏமாற்றம் காணப்பட்டது. எது உண்மை என்று தெரியாமல் அறியாமையினால் தான் செய்கிறார்கள் என்று நினைத்தேன் இது ஒரு எச்சரிக்கை. எல்லா மதத்தினருமே வேண்டுதல்கள் உண்மையா என்று சோதித்துப் பார்க்கவேண்டும்.

வேதம் சொல்லுகிறது, இப்படி ஆவிகளைச் சோதித்தறிய வேண்டும். கடவுளிடமிருந்து வருகிறதா என்று எல்லா மதத்திலும் இதைச் சோதித்து உண்மை கண்டறிய வேண்டும்.

 

 

 

கடவுளோடு எப்படி உறவுகொள்வது

இந்து மத ஆதாரங்கள்

தமிழ்-Tamil

Miracles in Hinduism

இயேசுவுடன் எனது சாட்சி

Saturday, December 6th, 2014

என் பெயர் ராப். அமெரிக்க ஜக்கியநாட்டிலுள்ள டெக்ஸாஸைச் சேர்ந்தவன். உங்களுக்கு என்னைப் பற்றி கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன்.

எனக்கு முக்கியமான தேவன் மீதுள்ள என் விசுவாசத்தைச் சொல்லியே எப்போதும் என் சாட்சியைத் துவங்குவது வழக்கம்.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு உண்மையான வெறுமையான நிலவரத்தில் இருந்தேன். இயேசுகிறிஸ்து மீது விசுவாசம் வைத்தபோது அவர் என்னை முழுமையாக நிரப்பினார். இப்பொழுது, உலகம் ஒருபோதும் தந்திராத அன்பு, சந்தோஷம், சமாதானம் எனக்குள் வந்தது.

இயேசுவே என் வாஞ்சையும் என் வாழ்வும் ஆனார்.

அப்படி ஒரு உண்மையான அனுபவத்திற்குள் செல்லாவிட்டால் நம்பிக்கை இழந்து, வேறு நம்பிக்கை தருபவற்றைத் தேடிச் சென்றிருப்பேன்.

மதம் தத்துவம் என்ற எல்லையைத் தாண்டி இயேசுவோடு ஒரு தனிப்பட்ட உறவு ஏற்பட்டதே எனக்குள் மாற்றத்தை நிகழ்த்தியது. ஏதோ ஒரு உண்மையான முடிவை எடுக்கத் தீர்மானிக்கும் கட்டத்தில், என்னை அவர் முழுமையாக மாற்றினார். எழுத்தின்படி ஒரே இரவில் என்று கூட சொல்லலாம். என் நடத்தை, எண்ணம், நம்பிக்கை எல்லாவற்றிலுமே முழு மாற்றத்தைப் பிரதிபலித்தது.

எனக்குள் எற்பட்ட இந்த வித்தியாசமான மாற்றம் அனைவருக்கும் தெளிவாக தெரியவந்ததை நான் மறுக்கமாட்டேன். நான் மறுபடிபிறந்தேன். இது ஆலயத்தில் சொல்லப்படுகிற வார்த்தைமட்டும் அல்ல.

இயேசுவுக்குள் நான் புதிய சிருஷ்டி ஆனேன்.

என்னால் மேற்கொள்ள முடியாத காரியங்களிலிருந்து தேவன் என்னை விடுவித்தார்.

என் வாழ்வில் சில மாற்றங்கள் மாறத்துவங்கின. சில ஒரே இரவில் மாறிவிட்டன. என்னை அடிமைப்படுத்தி இருந்த நிக்கோடின் (போதை) முதல் ஆபாச ஒழுக்கங்கள் (Sexual immorality) வரையிலான பல்வேறு பாவங்களை வெற்றி கொள்ள கர்த்தர் எனக்கு வல்லமை தந்தார்.

என் மனைவி பழுதடைந்த சிறுநீரக நோயிலிருந்து குணமானாள். என் மகன் ஆஸ்துமாவிலிருந்து விசுவாசத்தால் குணமானான். இதன் மூலம் உங்களுக்கு நன்மையான செய்தியைப் பகிர்ந்திருப்பேனென்றால் இந்தச் சாட்சியைவாசிக்கும் நேரத்தை வீணாக்கி இருக்கமாட்டேன்.

நீங்கள் சொல்லலாம் நான் உங்களை நம்பவில்லை என்றோ, உண்மை என்றும், தவறு என்றும் எண்ணி இருக்கலாம் ஆனால் நான் பணிவுடன் வேண்டுவதெல்லாம், நீங்கள் இயேசு உங்களிடம் இந்த உண்மையை வெளிப்படுத்த கேட்க வேண்டும். இதை வாசித்ததற்காக நன்றி கூறி இதன் மூலம் தேவன் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.

 

 

 

கடவுளோடு எப்படி உறவுகொள்வது

இந்து மத ஆதாரங்கள்

தமிழ்-Tamil

My Testimony with Jesus

கடவுளோடு எப்படி உறவுகொள்வது

Saturday, December 6th, 2014

தேவன் எல்லாவற்றையும் படைத்து மனிதனையும் படைத்ததாக வேதாகமம் நமக்குக் கூறுகிறது.

தேவன் நிறைவானவரும், நல்லவருமாயிருக்கிறார். ஆனால் மனிதன் அப்படி நல்லவனல்லன். தேவன் மனுக்குலத்தை, நன்மையையும் தீமையையும் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் திறமையுமுள்ள நல்லொழுக்கத்தின் பிரதிநிதியாகப் படைத்தார். தேவனின் வெளிப்பாடாகிய பரிசுத்த வேதாகமம், நாம் அனைவரும் பாவம்செய்து தேவ மகிமையிலிருந்து குறைந்து விட்டதாகக் கூறுகிறது.

ஒழுக்கத்தின் அடிப்படையான கட்டளைகள் சிலவற்றைக் கூறும் போதும் அதில் ஒரு வகையாலும் மீறாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

பாவம் கர்த்தரை விட்டு மீறுகிறது. வேறு தெய்வத்தை வணங்குவதோ, கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குவதன் மூலமோ பாவமாகிறது. தேவனாகிய கர்த்தரிடம் முழு இருதயத்தோடும் அன்பு கூறவேண்டும்

தாயையும் தகப்பனையும் கனம் பண்ண வேண்டும். கொலை செய்வதற்குச் சமமான பகை கொள்ளாதிருக்க வேண்டும். கண்களால் இச்சிக்கிற பாவமாகிய விபச்சாரம் செய்யக் கூடாது. களவு செய்யயக்கூடாது. தவறான எண்ணத்தோடு பிறர் மனைவியையோ, உடைமைகளையோ இச்சிக்கக்கூடாது. இவ்வாறு கட்டளைகளை மீறுவதானால் தேவனை விட்டு நித்தியமாகப் பிரிக்கிறது. அதனால் நாம் வழிதப்பி வேறுபிரிகிறோம். அவர் பரிசுத்தராயிருப்பதால் பரலோகில் பாவத்தோடு யாரையும் வாசம் செய்ய அனுமதிப்பதில்லை. பாவம் செய்தவர் மீது கோபமும் நியாயத்தீர்ப்பும் இறங்குகிறது.

அவியாத அக்கினி அணையாமலும் மிகுந்த உபத்திரவமும் உண்டு என வேதம் சொல்கிறது.

இந்தக் கோணத்தில் பார்த்தால் நமக்கு நம்பிக்கையின்மை தான் பிறக்கும். ஆனால் தேவன்; நமக்கு பாவத்திலிருந்து விடுதலை பெற பாவமற்ற மேசியாவை அனுப்பி இருக்கிறார்.

அவர் தேவனிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார். தனது மாம்சீக வாழ்வை தியாகம் செய்து நீதியை நிலை நிறுத்தினார். அவர் மனுக்குலத்துக்காக கர்த்தரோடு சமாதானத்தை ஏற்படுத்தினார். அவர் மரித்தது மட்டுமல்ல, உயிரோடெழுந்தார். இப்போது அவரிடம் நமபிக்கை வைத்திருப்போருக்காக காத்துக் கொண்டிருக்கிறார். மரணத்துக்குப்பின் நம் சரீரம் அவருடைய சமூகத்தில் போய்ச் சேர்ந்து வாழுவதே நித்திய வாழ்வு என்று வேதம் கூறுகிறது.

நாம் பாவத்தை விடுத்து இயேசுவை ஏற்றுக் கொள்ளும் போது அவர் மோட்;சத்தின் ஒரு பகுதியான பரிசுத்த ஆவியை நமக்குள் அனுப்பி கர்த்தருக்குள் சமாதானமாய் வாழ உதவிசெய்கிறார்.

இப்படிப்பட்ட விசுவாசத்தில் வளரும் போது உள்ளான பழைய மனுஷன் தண்ணீரில் அடக்கம் பண்ணப்படுவது போன்ற அனுபவத்துக்கு ஒப்பான முழுக்கு ஞானஸ்தானம் பெற்றுக் கொள்கிறான். ஒருவருடைய உள்ளான இருதயத்தில் கர்த்தர் வந்து வாசம் செய்கிற புதிய வாழ்வைத் துவங்கி அறிக்கை செய்வதாகும்.

இது ஒரு எளிமையான பரிமாற்றமாய்த் தோன்றும். ஆனால் கடைப்பிடிப்பதற்கு மிக ஆழமாய்த் தோன்றும். கர்த்தர் உங்களை நோக்கி ‘வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்கிறார். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

என் நண்பரே, இன்றைய நாளில் அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாமல் உங்கள் வாழ்க்கையை ஆத்துமாவின் மேய்ப்பாராகிய கிறிஸ்துவிடம் ஒப்படையுங்கள்.

அவர் உங்களை நேசிக்கிறார். சொல்லி முடியாத இளைப்பாறுதலையும் சந்தோஷத்தையும் உங்களுக்கு அவர் அளிப்பார். உங்கள் வாழ்வில் புயல்கள் வராது என்ற சொல்லவில்லை. ஆனால் அவர் உங்களை விட்டுவிலகுவதுமில்லை கைவிடுவதுமில்லை. அவரை உங்களுக்கு வெளிப்படுத்தும் படியாக அவரிடம் ஜெபித்து, உண்மையான அன்புடன் அவர் மீது நம்பிக்கை வையுங்கள்.

முழு மனதோடும் உண்மையாக இப்படிச் செய்வதன் மூலம் ஏமாற்றமே அடைய மாட்டீர்கள். கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்க்கும்படி உங்களை ஊக்கப்படுத்துகிறோம்.

 

 

www.4laws.com/laws/tamil/default.htm

இந்து மத ஆதாரங்கள்

தமிழ்-Tamil

How to know God

இந்து மத ஆதாரங்கள்

Saturday, December 6th, 2014

ரவி சகரியா – முற்காலத்தில் இந்துவாயிருந்தவர்

 

கர்த்தரை ஏற்றுக்கொண்ட ஒரு ஆசாரமான இந்து பிராமணரின் சாட்சி

 

பரிசுத்த வேதாகமம்

 

நான்கு ஆவிக்குரிய விதிகள்

 

ஜீசஸ் – திரைப்படம்